Tuesday, December 6, 2011

கதாப்பாத்திரங்கள்

ஒவ்வொருவர் வாழ்கையும்
கதைகளாக சித்தரிக்கப்படுமெனில்,
என் தாயின் கதையில்,நான் அவள் தந்தை ஆக,
என் தந்தையின் கதையில்,நான் அவர் ஆசிரியர் ஆக,
என் ஆசிரியரின் காதையில்,நான் அவர் மகனாக ஆக,
என் மகனுடைய கதையில்,நான் அவன் நண்பன் ஆக,
என் நண்பனின் கதையில்,நான் அவன் நண்பனாகவே ஆகவேண்டும்.

                                                                                                            -மீனா விக்னேஷ்




Monday, November 21, 2011

சட்டம்

சமுகத்தின் தவறுகள் மறைய,
அதன் மானம் காக்க,
கலாச்சாரம் வளர்க்க,
சட்டம் துணியால் நெய்யப்படுகிறது,
அதனை ஓட்டைகளுடன் நெய்வது,
நமது குறையேயன்றி சட்டத்தின் குறையல்ல.
-மீனாவிக்னேஷ்

Monday, October 3, 2011

விருதுகள்

சொந்த கவிதையா என கேட்கிறார்கள் என,
கவலைப்பட வேண்டாம்,
அந்த வார்த்தைகள் சில கவிதைகளை,பெற்றுத்தரலாம்.

என்னுடைய ஒரே படைப்புக்கு பல விருதுகள்
"இது உன் சொந்த படைப்பா"
எனும் வார்த்தைகளான அந்த விருதுகளை,
ஆச்சரியம் எனும் நூலில் கோர்த்து,
மலர்மாலையாய் என் மனதினில் சூடுகிறேன்.
-மீனாவிக்னேஷ் 

இப்படியும் இருக்கலாம் அந்த கவிதை. 

மனசாட்சி

நான் மத்தியஅரசு ஊழியன்,
சம்பளப் பணமெலாம்,
தண்ணி,தம்,பொண்ணு குட்டி என்று,
செலவாகி விட்டது,
லஞ்சப் பணமெலாம்,
அப்பனும்,ஆத்தாளுக்கும்,
பொழப்பு நடத்த,குடுத்தாச்சு,
மாசக்கடைசி பணமில்லை என,
இன்னும்மொரு லஞ்சம் தேடி அலைகையில்,
"ச்சி இதெல்லாம் ஒரு பொழப்ப,இப்புடி பொழைக்க,
பேசாம தூக்குல தொங்கலாம்"
என்றது என் மனசாட்சி,
சரிதான் இப்படி பேசிவிட,
வேறு யாருக்கு ,தைரியம் உண்டு.
-மீனாவிக்னேஷ் 

Wednesday, September 28, 2011

அனுபவ அறிவு

அம்மாவிடம், 
என் நண்பனின் பெயரைக்கூறிய பொழுது,
அவன் தந்தையின் பெயரையும்,
கேட்டுத்தெரிந்து கொண்டார்,
அவரின் முகவரி அம்மாவிடமிருந்து,

அடுத்த வீட்டுகராரின்,
 முகவரியும் தெரியாத நமக்கு,
ஆச்சரியமாகத்தான் இருந்தது,
அம்மாவின் அனுபவ அறிவை கண்டு.

-மீனாவிக்னேஷ் 

*நம்பிக்கை

உரையாடலின் பொழுது,
உண்மையா,பொய்யா எனத்தெரியாமல்,
பாராட்டுகளும்,கைத்தட்டல்களும் குவிந்தன,

"நான் எப்பொழுதுமே மகிழ்ச்சியாகத்தான் இருப்பேன்"

எனும் என்னுடைய வார்த்தைகளுக்காக, 

கைத்தட்டல்கள் அதிகமானது,

"என் லட்சியம் நிச்சயம் ஜெய்க்கும்"

எனும் என்னுடைய வார்த்தைகளுக்காக,
கைத்தட்டல்களில் காண்கிறேன்,
அடுத்தவரின் நம்பிகையை.

"you must implement" என்கிறார்கள்,
தமிழ் அர்த்தம் அறியாவிட்டாலும்,
உத்வேகமாகதான் இருக்கிறது.

-மீனாவிக்னேஷ் 

Thursday, September 22, 2011

வெகுளி

என்னை சுற்றி சிரிப்பவர்களை கண்டு,
நானும் சிரித்தேன்,
வெகுளியென,
பெயர் சூட்டினார்கள் ,

உண்மை தான்,அவர்களுக்கு,
பெயர் சூட்ட தெரியாத நான்,
வெகுளி தான்.

என்னை சுற்றி சிரிப்பவர்களை கண்டு,
நானும் சிரித்தேன்,
சிறுபிள்ளை என்றார்கள்,

சிரிப்பதை நிறுத்தி கொண்டேன்,
ஆனாலும் வளரவில்லை,
நானும்,என் மகிழ்ச்சியும்.

-மீனாவிக்னேஷ் 

Friday, September 16, 2011

அடர்ந்த காடு

நான் காட்டினுள் தொலைகிறேன் என்றால்,
அதில் சில புத்தகங்கள் வளர்ந்திருக்கும் ,
அது பல சொற்களை உதிர்த்திருக்கும் ,

பிறர் வார்த்தைகளை உரங்களாய் கொண்டு,
ஓவியமாய் வண்ண வண்ண நிறங்களில்,
தினம் தினம் சில பெயர்களை பூக்களாய் பூத்திருக்கும், 

அத்தகைய அடர்ந்த காட்டினுள்,
இன்று புதிதாய் பூக்க துடிக்கும் பெயராய்
                                                               மீனா விக்னேஷ் 

Monday, September 12, 2011

தானம்

ஜாதகத்தில் ஏதோ தோஷமாம்,
சக்கரைபொங்கலும்,
சாம்பார் சாதமும்,
தானமிடுகிறார் ஒருவர்,

தன்னை சுற்றி இருந்த,
எறும்புகளுக்கும்,
பறவைகளுக்கும் சேர்த்து,
தானம் பெறுகிறார் மற்றொருவர்,

அவரிடத்தில் ஜாதகமும் இல்லை,
தோஷமும் இல்லை.

-மீனாவிக்னேஷ் 

Tuesday, August 30, 2011

வேட்கை

உன் கை குட்டையின், 
கால்பகுதி வேண்டாம்,
என் கண்ணீர் துடைக்க.

உன் முந்தானை,
முழுவதும் வேண்டாம்,
என் தூக்கம் முடிக்க.

முழுவதுமாகத்தான் வேண்டும்,
உன் அன்பு மட்டும்.

                              -மீனாவிக்னேஷ். 

Monday, August 29, 2011

புகைபிடிக்கிறேன்

புகைபிடிக்கையில்,
புகையை, பிடிக்க நினைக்கிறன்.

கை நழுவி,
 காற்றோடு கலந்து விடுகிறது,

என் உயிரையும் சேர்த்துக்கொண்டு.


தீர்ந்து விட்ட பொருளை,

தேடும் தேடலில்,தொலைந்து போகிறேன் ,

என் விரல் எறியும் புகை மண்டலத்தில்.

                                                     - மீனாவிக்னேஷ்.

போதை

மது பழக்கத்தை வெறுக்கிறேன்,
கெட்ட பழக்கம் ஆதலால் அல்ல,

போதையான உன்னை
மறக்க சொல்லுதே ஆதலால் ,

Monday, August 1, 2011

சரியான தவறு

சிறுநீர் கழிக்கும் இடத்தில்
சிகரெட் புகை ஒன்றும் தவறில்லை !!!!

                                     _ க.கார்த்திகேயன்

Saturday, June 18, 2011

படிகள்

என் வாழ்கையில்,
வேக வேகமாய், கீழே இறங்க துடித்த நேரங்கள்.

நேர்முக தேர்வின்,
 விடை தாளில்,
 பதில் அளிக்கும் பொழுது.

அதே போல,
என் உயர் தகுதி,
தேவையில்லை  என தெரிந்து,
படிகள் இறங்கும் பொழுது.

-மீனாவிக்னேஷ் 

வரம்

இடியூறின்றி,
பிறந்து,
வளர்ந்து,
இறந்து போக வரம் கேட்டேன்,
தாயின் கருவறையில் பிறந்து,
வளர்ந்து,
இறந்தும் போக,
வரம் கொடுத்தார்,கடவுள்.
கடவுளிடம் கேட்டேன்,
மிண்டும் மிண்டும் ,
அதே வரம்,
வேண்டுமென்று 

Sunday, May 15, 2011

*என் தங்கை

நாயே,பேயே எரும,பண்ணி.
இப்படியாக என்னை அழைத்தவள்,
இப்பொழுதெல்லாம்,
அண்ணா,அண்ணா என்று தான் அழைக்கிறாள்.

பேருந்து,விமானம் கப்பல் தொடர்வண்டி,
இப்படியாக பயணித்து,
சலித்தவள் போல என் தோளில் ஏறி பயனிதவள்,
இப்போதெலாம்,
தொட்டாலும், சினுங்குகிறாலே,

எனெனில்,
என் தங்கை ஆனாலும், அவள் 
வளர்ந்து விட்ட பெண் அல்லவா..........


ரத்த சொந்தம் ஆனாலும்,
என் தங்கையை பிரிந்தேன்,
அவள் திருமணத்தின் பொழுது,

ரத்த சொந்தம் ஆனாலும்,
என் தங்கை பிரிந்தால், 
அவள் மகளை.

திருமணத்தின் பொழுது,
மணமகனாக என் மகன்.

                                                       -மீனா விக்னேஷ் 


Tuesday, May 10, 2011

*உன் இஷ்டம்

பின்னொரு நாளில்,

அவள் என்னிடம்,கூறினால்

நான், உன் கால் தூசிக்கும் சமமாக மாட்டேன்,

எப்படியானாலும், நான் உன்னை என் தலைமீது தான் சுமக்கிறேன்,

தூசியாவதும், கிரீடமாவதும்,

உன் இஷ்டம்

                                                                  -மீனா விக்னேஷ்  

ஏ.........டண்டநக்கா...........ஏ...........டணக்குநக்கா..........,

நம்ம டி.ஆர் கிட்ட,
ஒரு காதல் கவிதை கேட்ட,
எப்புடி  சொல்வாரு................


 ஏ.........டண்டநக்கா...........ஏ...........டணக்குநக்கா..........,

ஏ.........நி ஏழு பேர பண்ணாலும் லவ் இல்ல,

நி ஏழாவதுல பண்ணாலும் லவ் இல்ல,

ஏழேழு ஜென்மத்துக்கும் பண்ணுடா,

அது எப்பவுமே இனிக்குனு சொல்லுடா,


ஏ.........டண்டநக்கா...........ஏ...........டணக்குநக்கா..........,

அவ சேத்தாலே உன் பெயர பின்னால,

நி நிக்கணும்டா நல்லவனா அவ முன்னால,

ஊரெல்லாம் பேசுவாண்ட பின்னால,

நல்லதா நி புரிஞ்சுக்கடா  தன்னால....

ஏ.........டண்டநக்கா...........ஏ...........டணக்குநக்கா..........,

                                                   -மீனா விக்னேஷ்

Sunday, May 8, 2011

*செலவு

அன்று ஒருநாள்,தொலைபேசியில்

தமிழகம் முதல்,தாய் திருநாட்டின் 
தலைநகர் வரை.

வாழ்க்கை,வரலாறு,
கலாச்சாரம்,அரசியல்,
மதம்,மொழி.

இவையாவைகளும் பற்றி,
விரியாக உரையாடப்பட்டது,

ஆனாலும் வருத்தம் தான்,
அப்பாவின் காசு,
ஆதிகமாய் செலவாகிறதே.

                                                -மீனா விக்னேஷ்

  

Saturday, May 7, 2011

*சஞ்சலமில்லை

அவர்கள் இருவரும்,
ஆணும்,பெண்ணுமாய்,

கைகள் கோர்த்து,
கால்கள் நெடுக, நடக்கிறார்கள்,

கட்டி அணைத்தார்கள்,
முத்தம் கொடுத்தார்கள்,

ஆடினார்கள்,
பாடினார்கள்,
விளையாடினார்கள்,

ஆனாலும்,
இருவர் மனதிலும்,
கொஞ்சமும் கூட,
சஞ்சலமில்லை.

ஏனெனில்,
அவர்கள் இருவருமே,
குட்டி பசங்க.

                                                   -மீனா விக்னேஷ்     

*காதல் பாடம்

எனக்கு ஆங்கிலம் பிடிக்காது,
                  அவளுக்கோ தமிழ் பிடிக்காது,
எனக்கு கணிதம் பிடிக்கும்,
                அறிவியலும்  பிடிக்கும் ஓரளவுக்கு,
அவளுக்கோ அறிவியல் பிடிக்கும்,
                  கணிதமும் பிடிக்கும் ஓரளவுக்கு,

எங்கள் இருவருக்குமே பிடிக்காதது,
                  பாடமாகிய,
எங்கள் காதல் தோல்வி.
                                 
                                            -மீனா விக்னேஷ்  

Thursday, May 5, 2011

*காதல் பித்தன்

கைகள் கோர்த்து,
கடை வீதியில் வலம் வருகிறாள் அவள்.
அவள் கணவனுடன்,

அவள் என்னுடன் வாழ்திருந்தாள்,
மகிழ்ந்திருப்பேன்,

இன்று அவள் மகிழ்ச்சியை கண்டு,
அதனினும் அதிகமாய் மகிழ்வேன், என
காட்டிய என்,
காதல் தோல்விக்கு நன்றி.

அன்று அவளை விரும்பினேன்,

இன்றும் விரும்புகிறேன்,
அவளை விரும்பச்சொல்லும்,
என் காதலை.

                                                                 -மீனா விக்னேஷ்

Saturday, April 30, 2011

*திருமணத்திற்கு பின்

திருமணத்திற்கு பின்,


நான் அவளிடம்                                         அவள் என்னிடம்
மறைத்தவைகள்,                                      மறைத்தவைகள் .
மது குடிப்பேன்,                                         முன்பிருந்த,வேறொரு காதல்,
புகைபிடிப்பேன்,                                         கல்யாணம்,கர்ப்பம்,


இவை யாவும்,                                            இவை யாவும்,
அவள் அறிந்த பொழுது,                        நான் அறிந்த பொழுது,
நான் அவளிடம் கேட்ட,                          அவள் என்னிடம் கேட்ட.
கேள்வி.                                                          கேள்வி.

நி என்னை விட்டு,                                   அதே கேள்வி தான்.   
பிரிந்து விடுவாய ?   
                               
அவளிடமிருந்த                                          என்னிடமிருந்த,                                         
பதில்,                                                                பதில்,

நிச்சயமாக  பிரிய மாட்டேன்.              அதே பதில் தான்.


                                                                             -மீனா விக்னேஷ்

Thursday, April 28, 2011

ஜோயலும் சுந்தரராஜ பெருமாளும்

1

ஜோயல்,எதை வேண்டுமானாலும் விட்டு கொடுத்துருவான்,ஆனா தன்னோட நம்பிக்கைக்கு எதிரா யாராவது பேசும் போது மட்டும் , அவனால பொறுத்துக்க முடியாது,

ஜோயலுக்குன்னு சில அடையாளங்கள் இருக்கு,அது அவனை, எல்லோரிடமிருந்தும்  வேறு படுத்தி காட்டும்.

அவனோட, கடவுள் நம்பிக்கைக்கு எதிரான கருத்து,சில சமயம், அவன் நண்பர்கள வெறுப்படைய செய்யலாம்.

 கடவுளுக்கு எதிர ,நண்பர்கள் கூட,வாதாடுவது தான்,
ஜோயலுக்கு  விருப்பமான பொழுதுபோக்கு,

அப்படி, எவ்வளவு பொழுது போனாலும், போக்கு மாறுவதா தெரியல,

இப்படி தான் ஒரு நாள் , கல்லூரி விடுதியுள, கிருஸ்துவ மாணவர்களுக்காக,மாலை நேரத்துல ஜெபம் நடந்தது .

"உள்ளதை உள்ளதென்றும்,இல்லத்தை இல்லதென்றும் சொல்லுங்கள்:இதற்கு மிஞ்சினது தீமையுனால் உண்டாயிருக்கும்."
"கண்ணனுக்கு கண்,பல்லுக்கு பல் என்று,உரைக்கப்பட்டிருப்பதை கேள்விப்பட்டிருக்கிறீர்கள்.
நான் உங்களுக்கு சொல்லுகிறேன்:தீமையோடு எதிர்த்து நிற்க வேண்டாம்:ஒருவன் உன்னை வலது கன்னத்தில் அறைந்தால், அவனுக்கு மறுகன்னத்தையும் திருப்பி கொடு"
"இடர் படும் சகோதரனை,எழு முறை அல்ல,எழு எழுபததாயிரம் முறை,மன்னிப்பாயாக"

இப்படியாக,ஜெப குழு தலைவர் , தன்னோட பிரசங்கத்த முடிக்கும் போது,

அந்த வழியா,ஜோயல் நடந்து போயிட்டு இருந்தான்,

பிரசங்கம், ஜோயல் காதுகள்ளையும் விழுந்தது, கடவுள் சித்தம் போல,

"ஜோயல், கொஞ்சம் இங்க வர முடிமா?"

ஜெபகுழு தலைவர், ஜோயல அழைக்கிறாறு.

"ஏன் ஜோயல் நீங்க ஜெபத்துல கலந்துகிறதில்லையே ?"

"ஆமா, அதனால எனக்கு ஒன்றும், லாபம் இல்ல, நஷ்டம் இல்ல."

"இப்படியான செயல்கள், உன்ன எரிநரகத்துக்கு கொண்டு செல்லும்,தெர்யுமா?"

ஜோயல் முகத்தில் சிரிப்பு .

இப்படியே அதிக நேரம், பிரசங்கம்,தொடர்ந்து கொண்டே போச்சு , ஜோயலும் ரொம்பவே பொறுமையா இருந்தான்.

ஒரு கட்டத்துல ஜோயல், அவர் வலது கன்னத்துல, ஒரு அறை அறஞ்சான்,

"ஓ சாத்தானே தூரம் போ,இச்சகோதரனை விட்டு விழகு"

தன் கையில் இருந்த சிலுவையை  கொண்டு, ஜோயல் மண்டையில் ஒரு போடு.

அங்கேயே அவன் மயங்கி விழுந்துட்டான்.

அடுத்த நாள், இரண்டு பேரையும் விசாரனைக்க அழைத்திருந்தாங்க .

ஜோயல், தன்னோட முழு தப்பையும், ஒப்பு கொண்டான்,அதற்கு மன்னிப்பும் கேட்டான்.

"சரி,என்ன காரணம்,நி ஏன் அவரை அறையணும்?"


" உன்னை வலது கன்னத்தில் அறைந்தால், அவனுக்கு மறுகன்னத்தையும் திருப்பி கொடு"
"இடர் படும் சகோதரனை,எழு முறை அல்ல,எழு எழுபததாயிரம் முறை,மன்னிப்பாயாக" 

"இது மாதிரியான, பிரசங்கங்களை கேட்டு,நான் ஏமாந்துட்டேன்,அதுதான்,கோபம்,தயவு செய்து மன்னிச்சிடுங்க"

ஜெபகுழு தலைவர், தன் தவறை முழுமையா,உணர்ரதுக்குள்ளேயே,ஜோயல் வெளிய போயிட்டான்.

2

அவனோட இன்னொரு அடையாளம்,கிரிகெட்.
கிரிகெட் விளையாடும் போதும் சரி,பார்க்கும் போதும் சரி,
ரொம்பவே வித்தியாசமான ஜோயல, பார்க்க முடியும் .

அப்படியான நேரங்கள்ல,ஜோயல எல்லாருக்கும் பிடிச்சு, போறது ஆச்சரியமான விஷயம் இல்ல,

மதம்,நம்பிக்கை, இன்னும் எத்தனையோ, விஷயங்களை கடந்தவங்க தான்,
கிரிகெட் ரசிகர்கள்.

3

இன்னும் ஓர் அடையாளம்,அது ரம்யவுடனான காதல்.

முதல் பார்வையிலே, வசீகரிக்க கூடியவன் ஜோயல் .
ரம்யாவிடம் தான் அதை  அப்பட்டமா உணர முடிஞ்சது,

இவ்வளவு அன்பான ஜோயல,ரம்யாவுடன் மட்டும் தான்,பார்க்க முடியும்.

காதல்,இந்த வார்த்தைக்கு,சரியான அர்த்தம் தேடி தந்தாங்க.

ரம்யாவுக்கு,சுந்தர் ராஜா பெருமாள் , மீது அதீத நம்பிக்கை.

ஜோயலுக்கு,அந்த விஷயத்தில்,கொஞ்சம் சங்கடம் தான்,ஆனாலும் அவள் அன்புக்க அதை விட்டு கொடுத்தான்,

ஜோயலோட நம்பிக்கைகாக,ரம்யாவும் தான்,விட்டுகொடுக்கிறா.

அந்த இடத்தில,தான் அவங்க காதல், அதிகம் ஆனது.

எந்த ஒரு பிரச்சனையும் இல்லாம,ஜோயல் தன்னோட,வாழ்க்கை துனை ஆகணும்னு,சுந்தர் ராஜா பெருமாள் கிட்ட வரம் கேட்டிருந்தா,

அதுக்கு அவரோட பதில் "அப்படியே ஆகட்டும் "

ஜோயல் யாரிடமும், எந்த வரணும் கேக்கல,ஆனாலும் கிடைத்தது வரம்,
அது தான் ரம்யா.

ரொம்பவும் அன்பா வாழந்தாங்க,அவங்களோட அன்புக்கு அடையாளமா, பிறந்த குழந்தை, அஷ்வின்.

4

இப்படியான வாழக்கைல,ரம்யாவோட எந்த ஒரு வேண்டுதலும்,பொய்யானதில்லை,

நாள்தோறும் வேண்டுவது ஒன்னு தான்,ஜோயல் என்கூட  அன்பா இருக்கணும்,

என்னைக்குமே அன்பாகத்தான் இருப்பான்.

ஒரு நாள் எதோ பண்டிகை போல,வீடெல்லாம் ரொம்ப சுத்தமா,பிரகாசமா இர்ருந்தது,

இன்னும் ஒரு சிறப்பு,உலக கோப்பை கிரிகெட் இறுதிபோட்டி.

சொல்லவே வேண்டாம், ஜோயலோட கவனம் எல்லாம்,கிரிகெட் மேல தான்.

ரம்யாவோட கவனம் எல்லாம்,கொஞ்சம் உடல் நலம் சரி இல்லாத,அஷ்வின் மேலதான்,

போட்டியுல ,இந்தியாவோட நிலைமை கொஞ்சம் மோசம் தான்,தோத்துருவோமோ ? தோத்துருவோமோ ? என்ற கேவி தான்,ஒவ்வொரு ஓட்டத்துக்கும்.

தோத்து தான் போச்சு,ஜோயலுக்கு இதவிட கடுப்பான விஷயமே,வேற எதுவும் கெடையாது,
ரொம்பவும் கடுப்பு,

அதேநேரம்,ரம்யாவோட இடது கைல,மணி சப்தம்,வலது கைல தீப ஆராதன.

ஜோயலுக்கு வந்துச்சு பாரு கோவம்,ஒரே அறை,தீப ஆராதனயோட சேர்ந்து.சுந்தரராஜபெருமாளும்,குப்பயுல கடந்தாறு.

ரம்யா,அப்படியே சோர்ந்து போய் ஒரு மூலைல சாஞ்சுட்ட,அஷ்வினும் கூட,

அட கடவுளே,ஜோயல் இவ்வளவு கெட்டவனா,சகிக்க முடியல.

சுந்தரராஜபெருமாளோட வரம்,எங்க போச்சு??

அத்தெல்லாம் ஒன்னும் ஆகல,வரம் அப்படியே தான் இருக்கு,

கொஞ்ச நேரம் தான்,அத்தனை கோபமும்.
அதுக்கப்றம் அவன் கெஞ்சுன கெஞ்சலும்,கொஞ்சுன கொஞ்சலும்,
ரொம்பவே அதிகம்,கிரிகெட்ட விட ரொம்பவே நல்ல முடிவு தான்,

ரம்யாவும் அப்படி தான்,ரொம்ப வேகமாவே, ரம்யாவின் முகமும் மலர்ந்து விட்டது.

ஜோயல் அஷ்வின தூக்கி கைல வச்சுகிட்டான்,
"வாடா செல்லம் ஹாஸ்பிட்டல் போகலாம் "
"பாரு இவன் ஒடம்பு ரொம்ப சரி இல்ல"

மூணு பெரும் சேந்து,போகும் வழியுல,ஜோயல் ஒரு கேள்வி கேட்டான்.

யாரிடமும் இதுவரை கேக்காத கேள்வி,

இப்போ கூட ரம்யாவோட,சந்தோசத்துக்காக கேட்டான்.

"சாமி கிட்ட என்ன வேண்டிகிட்ட"

"அஷ்வின ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போகும் போது நிங்களும் கூட வரணும்னு வேண்டிகிட்டேன்ங்க"

"உன்னோட ஆசையை பெருமாள் நிறைவேத்திட்டாரா ?"

"ம்ம் ஆமாங்க ,"
என கூறும் போது அவன் கைகளை இறுக்க அணைத்து கொண்டால்.

வரம் கொடுத்த சுந்தரராஜ பெருமாள் இன்னும் குப்பையில் தான் கிடக்கிறார்....

                                                                                                        -மீனா விக்னேஷ்   















  




  

Wednesday, April 27, 2011

*காதல் பித்து

                             வருகைக்காக:

நேற்று அவன் காத்திருந்தான் என் வருகைக்காக,
 நடுவீதியில் .
இன்று அவன் காத்திருப்பான் என் வருகைக்காக,
மணமேடையில்.
நாளை நான் காத்திருப்பேன் அவன் வருகைக்காக,
சொர்க்கத்தில்

                                 அவள்:

அவள் சிரிக்கும் பொழுது,
 என்னை காண துடித்து,
 வரிசையை விட்டு,
 எட்டி நிற்கும் ஒட்டறை பல்.

என் முத்தங்கள் நிரப்ப,
இன்னும் இன்னும், அதிகம் ஆகும்,
அவள்  கன்னத்து குழிகள்,
அதனுடன்,
காதல்,
வெட்கம்,
நளினம்,
இவையாவும்,
நிறைந்தவள் அவள்.


                              மனைவி:

காதல்,
வெட்கம்,
நளினம்,
சிரிப்பு,இதனுடன்

தோல்வி,
வெறுப்பு,
அழுகையும் கூட, நிறைந்தவள் தான் அவள்,

ஆயுனும் நான் அவளை காதலிக்கிறேன்,
அவள் என் மனைவி

-மீனா விக்னேஷ்

Saturday, January 8, 2011

நைனா கடை

1

நைனா,
எங்க பகுதியுல ரொம்ப பிரபலமான நபர்,
வயது முதிர்தவர்,ரொம்ப மரியாதையான நபரும் கூட,

சிறுவர்  வட்டாரம் தான், அவர் மேல ரொம்ப மரியாதை வச்சிருந்தது,
ஏன்ந அவரோட கடைல தான் இலவசமா மிட்டாய் கெடைக்கும்,

அந்த, கடையோட வரலாற சுருக்க சொல்லனும்ன,எங்க அம்மாவும் அப்பாவும், அவர் கடை மேல அதிக பிரியம் வச்சிருந்ததா, அவரிடம் அதிக குறும்பு செஞ்சிருந்த  சொல்லி கேட்ருக்கேன்,

காலைல எழுந்ததுல இருந்து,இறவு தூங்குற வரைக்கும்
நெறைய தேவைகள பூர்த்தி செய்யும் அவரோட மளிகை கடை,      
ரொம்பவும் முக்கியமான,அத்யவசயமானதா  இருந்தது,

அவரோட கடின உழைப்பு,நேர்மை இதெல்லாம் தான்,
அவரை, இவ்வளவு நல்ல மனிதரா மாத்தியிருத்தது,

அவர் தெலுகு சமூகத்த சேர்த்தவரு,
அவங்க மொழில  நைனாவுக்கு 
அப்பான்னு அர்த்தம்.

அவர பற்றி தெரிஞ்ச, நெறைய மக்கள் அவர நைனாநு தான் கூப்டாங்க ,
ஆனால், அவர் யாரையும் தன் மகனா நெனச்சது  இல்ல,
உண்மைல, அவரோட  மகனா, இருக்கும்   தகுதிதான்,  யாருக்கும் இல்ல.

முகம் தெரியாத நெறைய நபர்கள், நைனாகிட்ட தன்ன தானே அறிமுகப்படுத்தி கொள்வாங்க,
தேவை  இல்லாம இப்புடி செய்றது அவருக்கு புடிக்காது,ஆனால்
சில தேவைகளோட தான், அவங்க அப்புடி செய்றதா,
நைனாவுக்கு புரியுறதில்ல.

யாரும், ஏது  கேட்டாலும் , அவர் இல்லன்னு சொல்ல மாட்டாரு,
இப்படி கொடுக்க தயாரான மனிதரிடம் கூட ஏமாற்றினால் தான்,
சந்தோசம்நு, நெனைக்கும் மனுசங்கள, எப்படி தன்னோட மக்களா நெனைக்க முடியும்.

அப்படி ஏமாத்துற யாரையும் அவர் கண்டுக்கள்ல,
எவ்வளவு தான் அவர  ஏமாத்திட முடியும்,அவரோட முழு  உழைப்பயும் யாராலும் ஏமாத்த முடியாது.

ஏன் இப்புடி முன்னமெல்லாம் ரொம்ப அதிகமா உழைத்த மனுஷன் இப்பல்லாம் ரொம்பவே களச்சு போய்ட்டாரு,

அவரோட வாழ்க்கைகு அப்பறம் அந்த கடைய எடுத்து நடத்த யாரும் இல்ல,
அந்த கவலை தான் அவர இப்புடி சோர்வடிச்சிரூச்சு.

வாரிசு இல்லாத அவரு யருக்காக உழைக்கனும்,

சரி மொத்தமா கடைய மூடிடலாம்நு நெனச்சா,அதுவும் முடியல,
அந்த கடையே  கதின்னு, இவ்வளவு நாளும், உழைச்ச உழைப்பு, 
கெட்ட பழக்கமாகி ,அவர விடாம புடிச்சிருந்தது.

அவருக்கு மகனோ, மகளோ இருந்திருந்தாலும்,
படிப்பு,வேலை,கல்யாணம்நு சொல்லி, ஏமாறத்தான் வேணும் ,
கடைசி காலங்கள ஏமாந்து போகதான் எல்லாத்தையும் சேர்கிறோம்,
ஏமாந்து போறத மகிழ்ச்சியா  ஏத்துகிறது தான் நிம்மதி.......

2

முருகேசன் ரொம்ப சின்ன வயசுலேயே அப்பா,அம்மாவை இழந்துட்டான்
படிக்க வழி இல்லாம,சாப்பாடு இல்லாம, நைனாகூட சேந்தது அதிஷ்டம் தான்.

நைனாவிடம் இருந்த, கெட்ட பழக்கம், அப்புடியே அவனுக்கும் வந்திருச்சு,
அதான், அதிகமா   உழைக்கிற பழக்கம்.

கடைய விட்ட ஒண்ணுமே தெரியாது ரொம்ப அப்பாவியா வளந்தான்.

அவனோட எல்லா தேவையும், நைனாவுக்கு தெரிஞ்சிருந்தது,

சரியான வயசுல, அவனுக்கு, ஒரு வாழ்கை, அமைச்சு குடுக்க ,நைனா தவறவிடல.

எல்லாமே சரியாய்,நடந்தது முருகேசனோட கல்யாணம்,
அவனோட குழந்த சக்தி,

சக்தி, வளர வளர, முருகேசனுக்கு  நெறைய லட்சியம் , கனவுகள் ,வளர
ஆரம்பிச்சது,

எல்லாமே சக்தி, எப்போ பார்த்தாலும் சக்தி நைனா மாதிரி ரொம்ப மரியாதையான மனுஷன் ஆகணும்,

நைனாவும் கூட, ரொம்ப சந்தோசப்பட்டாறு,ரொம்பவே நல்லா வளந்தான்.

வணிகமும்,பொருளாதாரமும் படிச்சான், படிப்பு,கல்லூரி,நகரம்,உணவு,பழக்க வழக்கம் ,சக்திய ரொம்பவே மாத்திரிச்சு.

கெட்டவனா மாறல,அதுவரைக்கும் சந்தோசம் தான்,

தன்னோட அப்பாவும்,நைனாவும்,அதிகமா ஏமாந்து போறாங்க,
வணிகம் செய்ய தெரியலநு, நெனச்சான்,
அது சரி தான். ஆனால்,
உண்மையில், வணிகம் தெரியாம அவங்க ஏமாறல.

அப்பா, நைனா இவங்க கூட சேர்ந்து இறுக்க,சக்தி கொஞ்சமும்,விரும்பல,

கல்லூரி படிக்கும் பொழுது,ஒரு பெண்ண காதலிசிருந்தன்,
அவல கல்யாணம்,பண்ணிகிட்டான்,சக்தியோட,
மாமனார் அவனுக்கு சொந்தமா,ஒரு சூப்பர் மார்க்கெட் வச்சு குடுத்தாரு, 

அவனோட கல்யாணமும்,கடையும் முருகேசனையோ, நைனாவையோ,
எந்த விதத்துலயும் பாதிக்கல, சக்தி தன்னோட வாழ்க்கைய,சரியாய்
வாழ்றத நெனச்சு,ரொம்ப சந்தோஷ பட்டாங்க..

முருகேசனும்,தொடர்ச்சியா நைனாகூடயே இர்ருந்து வந்தான்.

பொல்லாத உலகம்,சக்தியோட மனச, மெல்ல மெல்ல கெடுத்துச்சு,

தன்னோட அப்பா, வயசான காலத்துல, நைனா கடைல ரொம்ப
கஷ்டபடுறத நெனச்சு,தன்னோட வச்சிக்க,ஆசைப்பட்டான்,

எதுவுமே தவறில்ல,எல்லாத்துக்கும் சரி,சக்தியோட ஆசைக்காக,

நைனாவே முருகேசன,சக்தி கூட அனுப்பி வச்சாரு,

  3

சக்தியோட கடைல, எல்லாமே ரொம்ப வித்தியாசம், தரை,சுவர்,ஜன்னல்,கண்ணாடி எல்லாமே,ரொம்பவும்,பள பளப்ப,
இருந்தது அதே,போல தான் அங்கே வேலை செய்யும்  மனிதர்களும்,
வியர்வை இல்ல,வெற்றி இல்ல,களைப்பு இல்ல,களிப்பு இல்ல,
இயந்திரத்துக்கும் மோசமான வேலை,

இதை எல்லாம் ,மொத்தமா மாத்திடலாம் என,வேட்டியா மடிச்சு கட்டினா,எல்லாரும் சிரிக்கிறாங்க,
சக்தியும் கடுமையா, கட்டு படுத்துறான்,
நாட்கள் போக ,போக ,சக்திக்கு, அப்பாவின் நடவடிக்கையே புடிக்கல,
கடுமையான வார்த்தைகள்,கவலை,

நைனாவிடம் ஒரு நாளும், யாரும் அழுததில்லை,முருகேசன் அழுதான்,
நைனாவை விட்டு வந்ததுக்காக.

மனசெல்லாம் ஏதோ வெறுமையா உணர்தது,அவர் கால்ல விழுந்து மன்னிப்பு கேகுறதா நெனச்சிகிட்டு கெளம்பிட்டான்..

நைனா விட்டுக்கு வருவது யார இருந்தாலும்,ரொம்பவும் சிறப்பா,வரவேற்கும் பழக்கம் உண்டு.

அந்த நாள் நெறைய, விருந்தினர்கள் வந்திருந்தாங்க, ஆனா அவரால,
யாரையும் வரவேற்க முடியல, தன்னோட உயிரையும்,
யாருக்கோ தானம் ,கூடுத்துட்டாறு போல,
அங்கு இருந்த, அத்தனை பேர் கண்களையும் தண்ணீர்.

முருகேசன், தான் நெனச்ச மாதிரியே அவர்,கால்ல விழுந்து அழுகதான்,செஞ்சான் ,

முருகேசன்,நைனாவ விட்டு போகும் போதும்,அந்த கடை தான் ஆறுதல்,
முருகேசனை விட்டு நைனா போகும் போதும்,அந்த கடை தான் ஆறுதல்,

தன்னோட வாரிசா முருகேசன அந்த கடைய,நடத்த சொல்லி இருந்தாறு,
கடைய சரியாய் பாத்துக்க சொல்லும்    கடிதம் ,ரொம்பவும் பெரியது .

ஆனால் அது முருகேசனுக்கு தேவை இல்ல,நைனா ஆசைப்பட்டத விட,
ரொம்ப நல்லாவே முருகேசனால பாத்துக்க முடிந்தது,

முருகேசன் தன்னோட பையன் சக்தி கிட்ட, நெறைய தொழில் நுணுகங்கள,தெரிஞ்சிருந்தான்,

அத்தனையும் பிரதிபலிக்க,முருகேசனுடையதும் ,ஒரு பெரிய சூப்பர் மார்கெட்ட 
மாறிப்போனது ,

முருகேசன் கடைக்கு, ஒரு வித்தியாசம் மனிதாபிமானம் இருந்தது,கடைக்கும் வேல பாக்ரவங்களுகும்,
ஒரு உறவு இருந்தது,,
இவ்வளவு  வெற்றி அப்பறமும் முருகேசனால் சந்தோசமா இறுக்க முடியல,

சக்திய பத்தி ரொம்ப கவலைப்பட்டான்,

சக்தியும் மனசு மாறி அவங்க அப்பாவ, புரிஞ்சுக்கும் நாள் அவருடைய
 இறக்கும் நாளை இருக்குமோ .............

                                                                                              -மீனா விக்னேஷ்