Wednesday, September 28, 2011

*நம்பிக்கை

உரையாடலின் பொழுது,
உண்மையா,பொய்யா எனத்தெரியாமல்,
பாராட்டுகளும்,கைத்தட்டல்களும் குவிந்தன,

"நான் எப்பொழுதுமே மகிழ்ச்சியாகத்தான் இருப்பேன்"

எனும் என்னுடைய வார்த்தைகளுக்காக, 

கைத்தட்டல்கள் அதிகமானது,

"என் லட்சியம் நிச்சயம் ஜெய்க்கும்"

எனும் என்னுடைய வார்த்தைகளுக்காக,
கைத்தட்டல்களில் காண்கிறேன்,
அடுத்தவரின் நம்பிகையை.

"you must implement" என்கிறார்கள்,
தமிழ் அர்த்தம் அறியாவிட்டாலும்,
உத்வேகமாகதான் இருக்கிறது.

-மீனாவிக்னேஷ் 

No comments:

Post a Comment