Tuesday, March 13, 2012

அவளும் இல்லை அவனும் இல்லை நான்

1
"அவளும் இல்லை அவனும் இல்லை நான்"
எனும் வார்த்தைகளுடன் என் முதல் கதையை முடிக்க போகிறேன்.


"மச்சான் இந்த லீவ் தான் டா கடைசி,அப்புறம் காலேஜ்,படிப்புன்னு ஆயிடும்.அதனால ஐஸ்வர்யா கிட்ட சொல்லியே ஆகணும் டா"


எனும் பிரதிப்-ன் வார்த்தைகளுடன் தொடங்குகிறது .
இனி நடக்கப்போகும் நிகழ்வுகள் அனைத்திற்கும்,நடித்து காட்ட வேண்டியது மட்டுமே பிரதிப் -ன் பொறுப்பு,
மற்றபடி கதை,திரைக்கதை,இயக்கம் எல்லாம் என்னுடையதே.


அடடா எதோ ஒன்று குறைகிறதே என பார்கிறீர்களா,அதென்ன பெரிய வசனம்,வெறும் முன்றே வார்த்தைகள் தானே,
அதனை பிரதிப் கூட பார்த்து கொள்ள முடியும்.

பிரதிப்-ன் காதலை, ஐஸ்வர்யாவிடம் சொல்வதற்கு சில திட்டங்களை வகுத்தோம்.

"அவளுக்கு இன்னும் எக்ஸாம் முடியலடா,எக்ஸாம் முடிஞ்சு போகும் போது அவ வீட்டு பக்கமா வச்சு மடக்கிடலாம் ஓகே யா"

"இல்ல மச்சான் அவ விடு பக்கம் நெறைய தெரிஞ்சவங்க இருக்காங்க,யாராவது பாத்துட்ட பிரச்சனை ஆயிடும்டா"

"அப்படின்னா ஸ்கூல் பக்கமா பாக்கலாமா?"

"ஓகே பாக்கலாம்.,அப்புறம் எப்படி பேசுறது ?"

"அவ சைக்கிள்-அ தான் வருவா,நம்மளும் ஒரு சைக்கிள் எடுத்துக்கலாம்,
நி சைக்கிள்-அ பின்னாடி ஒக்காந்துக்க,கூட்டம் கொறச்சல இருக்குற இடமா பாத்து,நா அவ பக்கமா சைக்கிள்-அ கொண்டு போவேன்,நி ரன்னிங்-லயே அவ கிட்ட சொல்லிடனும்  ஓகே யா"

"ஓகே....,"

ஏதோ அரை மனதுடன் ஒப்புக்கொண்டான் பிரதிப்.

கச்சிதமாக தேர்வு முடியும் நேரத்துக்கு முன்னரே,அவள் பள்ளியின் தெருமுனையில் நின்று கொண்டிருந்தோம்,

"மச்சான் அவ வற்ரா டா "

"ஓகே வா வா வா.............."

அவளின் வேகம் கொஞ்சம் அதிகமாய்த்தான் இருந்தது,
ஆனாலும் எப்படியோ சமாளித்து கொண்டு,அவளை நெருங்கி,சைக்கிள்-ஐ செலுத்த தொடங்கினேன்.

"டே சொல்லுடா.......,,,"அவனிடமிருந்து எந்த பதிலும் இல்லை,

முன்னிருந்த படியே சைக்கிள்-ஐ செலுத்துவதால்,அவன் என்ன செய்கிறான் என பிடிபடவில்லை,
சொல்வதற்கு முயற்சிக்கிறான,இல்லை பயந்து கிடககிறான,அல்லது அவளை ரசிக்க தொடங்கி விட்டான,ஒன்றும் புரியாமல் வெறுப்பாகி விட்டது,
கூட்ட நெரிசலில்,நெளிவும் சுழிவுமாக அவள் வேகம் அதிகரித்து விட,
தடாலென சைக்கிள்-ஐ நிறுத்தினேன்.

"என்னடா செய்ற,சொல்லி தொலைக்க வேண்டியது தானே"

"பயமா இருக்குடா பேச்சே வரலடா,அவ விடு உள்ள போகும் போது என்னைய திரும்பி பார்ப்பா டா,வாடா போகலாம்"

இந்த வார்த்தைகளுக்கு எனது முகம் கொடூரமாக மாறிப்போனது.
பிரதிப் -னுடைய நிறைய கெஞ்சல்களுக்கு பின்,மிண்டும் அவளை பார்க்கலாமென,அவளின் விடு வாசலை,அப்படியும் இப்படியுமாக,பல முறைகள் கடந்து கொண்டிருந்தோம்.சலித்து போனது தான் மிச்சம்.

நாளை பார்க்கலாம் என பொழுதுகள் என்னிடம் கூறுவதை போல் உணர்தேன்,
2
மறுநாள்,என் தொலைபேசியில் முதல் அழைப்பே அவனுடையதாய் தான் இருந்தது .

ஐயோ இவன் தொல்லை தாங்க வில்லையே......,ஆனாலும் நண்பன் அல்லவா,என் மனதிடம் ஆறுதல் கூறிவிட்டு,சென்றேன்.

"என்ன மச்சான் பிளான் ரெடியா"

"பிளான் எல்லாம் ரெடி தான் நி சொதப்பாம இருந்த மட்டும் போதும்"

"ச்சி ச்சி,இன்னைக்கு ரொம்ப நம்பிக்கையா இருக்கேண்டா சொல்லியே தீருவேன்"

"ம்ம் பாக்கலாம் என்ன பண்றன்னு !"

"ஓகே டா நி பிளான்-அ சொல்லு"

"ஓகே நல்லா கேட்டுக்கோ,பெருமாள் கோவிலுக்கு பின்னாடி ரெண்டு வளைவு,இருக்கு நடுவுல சின்ன இடம் தான்,அந்த எடத்துல,அவ வற்ற நேரம் பார்த்து.
அவ வழிய மறிச்சு நான் கிழ விழுந்துடுவேன்,அதனால அவ கொஞ்ச நேரம் நிக்க வேண்டியது வரும் அந்த நேரத்துல நி அவ கிட்ட பேசிடனும்.ஓகே யா?"

"இல்ல மச்சான் எதுக்கு கிழயல்லாம் விழுந்துகிட்டு,கொஞ்சம் கஷ்டமா இருக்குமேன்னு யோசிக்கிறேன்."

"எனக்கு என்னடா கஷ்டம் நி தான அவ கிட்ட பேசப்போற"

"ஓ.! அதுவும் சரிதான் உனக்கு கிழ விழுந்து அடிபடும்,எனக்கு விழுகாமலே அடிபடப்போகுது,சரிதானே"

அட்டகாசமான சிரிப்புக்கு பின் மிண்டும் எங்களை திட்டத்துக்கு தயார் படுதிக்கொண்டோம்.
நினைத்த படியே,எல்லாம் சரியாக நடந்தது,அவள் வளைவை கடந்ததும்,இடை மறித்து நான் கிழே விழுந்து விட்டேன்.
அவள் அவளுடைய தோழிகளுடன் நின்று கொண்டிருந்தாள்.
நான் விழுந்து கிடப்பது,எங்கள் வீட்டு மெத்தையில் அல்ல,ஆகவே சீக்கிரம் எழுந்திருக்க வேண்டிய அவசியமாயிருந்தது.
அந்த சீக்கிரம் ,பிரதிப்-க்கு போதுமானதே,ஆனாலும் அவன் அதை உபயோகப்படுத்தவில்லை.
கோவிலின் மதில் சுவரில் யாராலும் மறைந்து கொள்ள முடியாது,ஆனாலும் மனதளவில் அவன் மறைந்து நின்று கொண்டிருந்தான்.

'லூசட நி உனக்காக தானே நடு ரோட்டல விழுந்து கெடக்குறேன்,சொல்லி தொலைக்க வேண்டியது தானே."

"இல்ல மச்சான் அவளோட friends எல்லாம் என் தங்கசிக்கு தெரிஞ்சவங்கடா,போட்டு கொடுத்துருவாளுகடா."

"ஆமாண்டா இத மட்டும் நல்ல வக்கனையா பேசு,மானங்கெட்ட பொழப்புடா, ச்சி....."

"ஏன்டா கோவப்படுற,பிளிஸ் டா மன்னிச்சிருடா மச்சான்"

"நா  மன்னிச்சா மட்டும் போதுமா,எப்போதான் சொல்லப்போற,எக்ஸாம் எல்லாம் முடிஞ்சு போச்சு,கடைசி சான்ஸ்ஐயும் மிஸ் பண்ணிட "

"இல்லடா திருவிழா வருதில்ல அப்போ பாத்துக்கலாம் டா"

"ஆமா திருவிழா நேரத்துல,சாமி பின்னாடி சுத்தாம,அவ பின்னாடி சுத்த சொல்றியா"

"ப்ளீஸ் டா,மச்சான் நி இல்லாம முடியாது டா ப்ளீஸ்"

"இல்ல டா எனக்கு நம்பிக்கை இல்ல,நி சொதப்ப தான் போற"

"கொறஞ்சது ஒரு போட்டோ எடுக்கணும் டா,அத பாத்துகிட்டே கூட இருந்துடுவேண்டா"

"ஓகே டா,யோசிச்சு சொல்றேன்."

யோசிக்க அதிக நாட்கள் இல்லை,கூடிய சிக்கிரமே திருவிழாவும் வந்து விட்டது,
கடைசியில் குறைந்தபட்ச தேவை எனக்கருதிய புகைப்படம்,அதிகபட்ச தேவையாகிப்போனது.


"மச்சான் ஒரே கொழப்பமா இருக்கு டா,என்னடா பண்ண போறோம்?"


"அதெலாம் நி ஏன் யோசிக்கிற,பிளான் ரெடி"


"என்னடா சொல்ற!,எப்படி?"


"சாமி ஊர்வலம் அவங்க வீட்டு வாசல கடக்கும் போது,போட்டோ எடுத்திடலாம்,ஓகே யா"


"இல்ல மச்சான்,வெளிய தெரிஞ்ச பெரிய பிரச்சனை ஆயிடும் டா,அடிச்சு கொன்றுவாயிங்க"


"பயப்படாத,அதெலாம் நா பாத்துகிறேன்,நி கேமராவ மட்டும் ரெடி பண்ணு"


மிகச்சில தினங்கள் மட்டுமே மிச்சமிருந்தன,நாட்கள் கடந்து,கடந்து கடைசி மணிநேரங்கள் வரை கடந்து விட்டோம்.
பிரதிப்,நான்,பாலா என மூன்று முட்டாள்கள்,அவளின் வருகைக்காக,அவளின் வீட்டு வாசலின் எதிரில் காத்திருந்தோம்.
சாமியோடு சேர்த்து அவளையும் படமெடுக்க,எந்த வாய்ப்பும் சிக்கவில்லை.
புகைப்பட காரர்களை விட அதிகமான கோணங்களில் முயற்சித்தாகி விட்டது,
இறுதியில் அதீத துணிச்சலுடன் சற்று தள்ளி நின்று,அவள் முகம் படுமாறு,ஒரே அழுத்து,வேலை முடிந்தது,
அதே சமயம் அவளின் குடும்ப நபர் ஒருவனால் கவனிக்க படுவதையும் உணர்ந்தேன்,அது அவளின் சித்தப்பா.
கூட்டம் சற்று,கலைந்தாலும்,நாங்கள் பிடி படுவது உறுதி,அந்த சிறிய இடைவேளையை,உபயோக படுத்தி கொண்டேன்.

"மச்சான் மாட்டிகிட்டோம் டா"


"என்னடா சொல்ற !!...??"


"ஓகே பரவாயில்லை,நி ஓடு,ஏதோ நா பாத்துகிறேன்"


புகைப்பட கருவியின்,சேமிப்பு பகுதியை பாலாவிடம் கொடுத்துவிட்டேன்.


அவளுடைய சித்தப்பா,என்னை தடதடவென வீட்டினுள் இழுத்து சென்றார்,
எந்த கேள்வியும் இன்றி கன்னத்தில் ஓர் அரை விழுந்தது,அதற்குள் அங்கே நண்பர்கள் கூடிவிட்டதனால்,அவரை தடுத்தி நிறுத்தினார்கள்.


"யோவ்.....எதுக்குய அடிக்கிற"


"எங்க வீட்டு பொண்ண போட்டோ எடுக்குறான் யா...இந்த பய"


"அதெலாம் இல்லங்க,இதுல போட்டோல்லாம் எடுக்க முடியாதுங்க,சும்மா தேவையில்லாம சந்தேகப்படாதிங்க"


"டே சும்மா பேசாதட,உங்களைப்பத்தி எனக்கு தெரியாத,தெருப்பொறுக்கி பயலே"


"அதிகமா பேசாதிங்க,உங்க பொண்ணு போட்டோ,கேமராவுல இருந்த மட்டும் பேசிக்கலாம் ஓகே யா"


"ம்ம் குடு பாக்கலாம்,நானும் உன் வயசெல்லாம் பாத்தவன் தான் டா "


கருவி கைமாறியது.
"நி உங்க அப்பாவ கூப்ட்டு வா,அவர்கிட்ட பேசிட்டு கேமராவ தரேன்"


"ஐயோ இது என் friend கேமராங்க !"


"யாரு அந்த பிரதிப் பயலா,அவனையும் கூட்டியா,கொஞ்சம் பேச வேண்டியதிருக்கு."


என்ன செய்வதென்றே தெரியவில்லை,பிரதிப்-ஐ தொடர்பு கொள்ள முயன்று கொண்டிருந்தேன்,வெகு நேரமாய் சிக்கவில்லை,ஆகையால் என் அப்பாவிடம் சொல்லி ஏதேனும் செய்யலாம் என தோன்றியது.
நான் வீட்டிற்கு செல்லும் முன்னே,நடந்தவைகள் யாவும் வீட்டிற்கு தெரிந்திருந்தது.


"ஏன்டா மவனே எவனோ,ஒருத்தன் லவ்-க்கு நீ அடி வாங்கிட்டு  வந்து நிக்கிற"

என்று நடந்ததை அப்பாவிடம் விவரிக்கும் முன்னே, அவர் என்னை திட்ட தொடங்கினார்.

"சரிப்பா நீ வந்து கேமரா வாங்கி கொடு".

"இல்லடா உன்னை அடிச்சதுக்கே அவங்க கிட்ட கேட்க தான் வேணும் , பிரதீப் - ஆ இல்லாம நீ லவ் பண்ற பொண்ண இருந்தா இன்னிக்கே கல்யாணம் பேசி முடிச்சிருப்பேன் டா, அவனுக்காக நம்ம ஏன்டா போயி பேசணும் ", என்றார் .

இதனிடையில்,பாலாவின் மூலம் ஐஸ்வர்யாவின் விட்டிற்கும் உண்மை யாவும் தெரிந்திருந்தது.

பிறகு , எப்படியோ பிரதிப்-ஐ தேடி கண்டு பிடித்துவிட்டேன் , திருவிழா நேரம் என்பதால் எங்களுடன் நெறைய நண்பர்கள் கூடி இருந்தார்கள், மீண்டும்
ஒரு முறை அவளின் விட்டிற்கு சென்று பேசிப்பார்பது என்று முடிவு செய்தோம்.
போகும் வழியிலே,பெருவாரியாக அனைவரும் கழன்று விட்டிருந்தார்கள்.
இறுதியாக நானும், பிரதிப் மட்டுமே மிஞ்சி இருந்தோம்.
அதீத தைரியத்துடனே,அவளின் வீட்டு வாசற்படியை மிதிக்க வேண்டியதிருந்தது.
நல்ல வேலையாக அவளின் சித்தப்பா விட்டினுள் இல்லை.


"என்ன தம்பி உங்க அப்பாவ கூட்டி வரசொன்ன இந்த பயல கூட்டியந்துருக்க?"

"இல்லங்க கேமரா இவனோடது தான்,அதான் பேசிப்பாக்கலாம்னு...."

"இல்ல தம்பி கேமரா,யாரோடத இருந்தாலும் அவங்கவங்க அப்பாவ கூட்டி வாங்க பேசிக்கலாம்" என்றார் அவளின் தந்தை.

வேறேதும் பேச திறனில்லாதவர்களாய்,வெளியேறினோம்.
நாங்கள் வெளியேறவும்,அவளின் சித்தப்பா கண்ணில் படவும் சரியாக இருந்தது.
அவளின் சித்தப்பா,மிகுந்த கோபத்துடன் பிரதிப்-ஐ அடிக்க துரத்தினார்,
அந்த ஓட்டத்தில் தொலைந்தவனை,பிறகு கண்டு பிடிக்கவே முடியவில்லை.
தொலைபேசியில் முயற்சித்தபோது,தொடர்பு எல்லைக்கு வெளியே உள்ளார் எனத்தெளிவாக கூறியது.


கிட்டதட்ட  ஆறுமாதங்கள் கழித்து அவனை மிண்டும் சந்தித்தேன்.



"மச்சான் எப்புற்ற இறுக்க?,பாத்து ரொம்ப நாள் ஆச்சேடா"

"ஆமாண்டா மச்சான் வீட்டுல கொஞ்சம் பிரச்சன அதான் ஊர்லையே இல்லடா"

"அப்பறம் ஐசு எப்புடி இருக்கா,இந்த தடவ கண்டிப்பா சொல்லிரலாம் ஓகே யா"

"இல்ல டா மச்சான் ,அதெல்லாம் வேணாம்,அவளப்பத்தி ஒரு மேட்டர் இருக்கு'

"என்னடா மேட்டர் ?"

"எந்தங்கச்சி கிட்ட சொல்லி,ஐசு நம்பர் வாங்கிட்டேன் டா,எனக்கு பயமா இருந்துச்சு,அதான் என் காலேஜ் friend கிட்ட சொல்லி அவ கிட்ட பேச சொன்னேன் ,கொஞ்ச நாள்ல அவங்க ரெண்டு பேரும் நல்ல friends ஆயுட்டாங்க,
அந்த பையன் சொல்றான் ஐசு சுத்தமா சரி இல்லையாம்டா,அது ரொம்ப அசிங்கம பேசுதான்,
அவ சரியான அய்ட்டம்-னு (பரத்தை போலானவள் ) சொல்றான் டா,அதான்
வேணாம்னு விட்டுட்டேன் மச்சான்"

இப்படியான வார்த்தைகளை கேட்டதும் எனக்கு ஏதோ தலை சுற்றுவது போல் ஆகிவிட்டது,
ஏதோ பெரிய தவறு செய்து விட்டதாக,என் மனம் என்னை அழுத்த தொடங்கியது,யாரிடமாவது சொல்லி ஆறுதலடைய வேண்டும்,
ஆதலால் தான் இதை கதையாக எழுத தொடங்கினேன்.
முதலில் நான் கூறியதை போல,
காதலால் தோற்றது,அவளும் இல்லை அவனும் இல்லை நான்.
எனும் வரிகளுடன் முடித்து கொள்கிறேன்.
                                                                                                என்றும் அன்புடன்
                                                                                                        சரவணன்
- மீனாவிக்னேஷ்