Sunday, May 15, 2011

*என் தங்கை

நாயே,பேயே எரும,பண்ணி.
இப்படியாக என்னை அழைத்தவள்,
இப்பொழுதெல்லாம்,
அண்ணா,அண்ணா என்று தான் அழைக்கிறாள்.

பேருந்து,விமானம் கப்பல் தொடர்வண்டி,
இப்படியாக பயணித்து,
சலித்தவள் போல என் தோளில் ஏறி பயனிதவள்,
இப்போதெலாம்,
தொட்டாலும், சினுங்குகிறாலே,

எனெனில்,
என் தங்கை ஆனாலும், அவள் 
வளர்ந்து விட்ட பெண் அல்லவா..........


ரத்த சொந்தம் ஆனாலும்,
என் தங்கையை பிரிந்தேன்,
அவள் திருமணத்தின் பொழுது,

ரத்த சொந்தம் ஆனாலும்,
என் தங்கை பிரிந்தால், 
அவள் மகளை.

திருமணத்தின் பொழுது,
மணமகனாக என் மகன்.

                                                       -மீனா விக்னேஷ் 


No comments:

Post a Comment