என்னை சுற்றி சிரிப்பவர்களை கண்டு,
நானும் சிரித்தேன்,
வெகுளியென,
பெயர் சூட்டினார்கள் ,
உண்மை தான்,அவர்களுக்கு,
பெயர் சூட்ட தெரியாத நான்,
வெகுளி தான்.
என்னை சுற்றி சிரிப்பவர்களை கண்டு,
நானும் சிரித்தேன்,
சிறுபிள்ளை என்றார்கள்,
சிரிப்பதை நிறுத்தி கொண்டேன்,
ஆனாலும் வளரவில்லை,
நானும்,என் மகிழ்ச்சியும்.
-மீனாவிக்னேஷ்
No comments:
Post a Comment