Monday, September 12, 2011

தானம்

ஜாதகத்தில் ஏதோ தோஷமாம்,
சக்கரைபொங்கலும்,
சாம்பார் சாதமும்,
தானமிடுகிறார் ஒருவர்,

தன்னை சுற்றி இருந்த,
எறும்புகளுக்கும்,
பறவைகளுக்கும் சேர்த்து,
தானம் பெறுகிறார் மற்றொருவர்,

அவரிடத்தில் ஜாதகமும் இல்லை,
தோஷமும் இல்லை.

-மீனாவிக்னேஷ் 

No comments:

Post a Comment