Friday, September 16, 2011

அடர்ந்த காடு

நான் காட்டினுள் தொலைகிறேன் என்றால்,
அதில் சில புத்தகங்கள் வளர்ந்திருக்கும் ,
அது பல சொற்களை உதிர்த்திருக்கும் ,

பிறர் வார்த்தைகளை உரங்களாய் கொண்டு,
ஓவியமாய் வண்ண வண்ண நிறங்களில்,
தினம் தினம் சில பெயர்களை பூக்களாய் பூத்திருக்கும், 

அத்தகைய அடர்ந்த காட்டினுள்,
இன்று புதிதாய் பூக்க துடிக்கும் பெயராய்
                                                               மீனா விக்னேஷ் 

No comments:

Post a Comment