Saturday, May 7, 2011

*சஞ்சலமில்லை

அவர்கள் இருவரும்,
ஆணும்,பெண்ணுமாய்,

கைகள் கோர்த்து,
கால்கள் நெடுக, நடக்கிறார்கள்,

கட்டி அணைத்தார்கள்,
முத்தம் கொடுத்தார்கள்,

ஆடினார்கள்,
பாடினார்கள்,
விளையாடினார்கள்,

ஆனாலும்,
இருவர் மனதிலும்,
கொஞ்சமும் கூட,
சஞ்சலமில்லை.

ஏனெனில்,
அவர்கள் இருவருமே,
குட்டி பசங்க.

                                                   -மீனா விக்னேஷ்     

No comments:

Post a Comment