Tuesday, June 26, 2012

மாநகரம்

வெறிச்சோடிய தெருக்களில்,
குறுக்கும் நெருக்குமாக,
வாகனம் ஓட்டி பழகியவன் நான்,
மாநகரின் பரபரப்பான சாலைகளில்,
போக்குவரத்து சமிக்ஞை பொறுமை கற்று தருகிறது.

கையில் இருந்த பணமெல்லாம்,
காலியாகிவிட்டால்,
தேதி பார்காமலே சொல்லிவிடலாம்,
மாதக்கடைசியென்று.

என் வயதிற்கு இணையானவர்களே
படித்துக்கொண்டிருக்கையில்,
என்னை விட சிறியவர்கள்,
இங்கே உழைத்துக் கொண்டிருக்கிறார்கள்,

தினம் தினம் எடுக்கும் கணக்கெடுப்பில்,
இளைஞர்கள் அதிகம் என காட்டினாலும்,
முகத்தின் சோர்வு,
அவர்களை முதியவர்களாக காட்டுகிறது.

மேல் உள்ளவை ஒன்றோடொன்று
சம்மந்தமில்லை,என கருதினால்,
மாநகரம் அப்படிப்பட்டதே,
ஒன்றோடொன்று சம்மந்தப்படுவதில்லை

-மீனா விக்னேஷ் 

No comments:

Post a Comment