Tuesday, June 26, 2012

ஓர் கசப்பான உண்மை

நீண்ட தெரு வழியாக
                 அவள் நடந்து செல்கிறாள்,
                                                அதன் குறுக்கான தெருக்களில்
                 என் மிதிவண்டியை செலுத்தி,
                                                மிண்டும் மிண்டும் அவளின்
                   எதிர் படுமாறு சென்றதுண்டு,

அவள் எதிர் படும் போதெல்லாம்,
                  அனிச்சையாய் என் தலை மயிரை,
                                                    கோதி விடுவதுண்டு,

அவளுக்காக அரைமணி நேரம்
                        காத்திரிப்போம் என்று அனுமானித்து,
                                                    அதில் தோற்று,
                         பலமணி நேரங்களாய் நீடித்து,
                                                   அதிலும் தோற்றதுண்டு,

ஆளில்லாத அவள் வீட்டு மொட்டை,
                           மாடியை பார்த்தவாறு,
                                                பல ஜாலங்கள் செய்யும் மேகங்களை,
                           காணாமல் தவறவிட்டதுண்டு,

அவள் உலக அழகி என கனவில் கண்டு,
                            அவள் கையொப்பம் வாங்கிட,
                                               காகிதம் இல்லாததால்,
                            ஆயிரம்ருபாய் நோட்டு நீட்டியதுண்டு,

அவளின் பொய்யான வருகையை சுட்டிக்காட்டி,
                              பலர் என்னை கேலி  செய்ததுண்டு,
                                              ஏமாந்த பொழுதும்,
                              அதில் வெக்கி நகைத்ததுண்டு,

பல வருடங்கள் கடந்து விட்ட இன்று,
                               இவையணைத்தும் காதலே இல்லை,
                                                    என சொல்கிறது ஓர் கசப்பான உண்மை.

                                                                                                 -  மீனா விக்னேஷ்

No comments:

Post a Comment