Thursday, April 26, 2012

பரினாமக்குறை

குரங்கினமும் கூட்டமாகத்தான் வாழ்கின்றது,
அதனிடம் நவீன தொழில்நுட்பம் இல்லை,
நியாயவிலை கடைகள் இல்லை,
அது போல அவைகள் தூக்கிலிட்டு தொங்குவதும் இல்லை.

தேனீயும்,எறும்பும் ஐந்தறிவு கொண்டவைகளாம்,
அவைகளைவிட குறைவாக சேமிக்கும் மனிதனுக்கு,
ஆறாம் அறிவு ஒரு சாபக்கேடு.

குரங்கிலிருந்து மனிதன் பிறந்தான்,
ஆடு இன்னும் ஆடகவே இருக்கிறது,
ஆதலால் தான் அதை நாம் தின்று கொள்கிறோம்.

ஆபத்து என குரைக்கிறது ஒரு நாய்,
மற்றொரு நாய்க்கு அது புரியாமல் போகலாம்,
சுட சொல்லி ஆணை இடுகிறான் ஒரு மனிதன்,
மற்றொரு மனிதனுக்கு புரிந்து விடுவதால்,
செத்து மடிகிறது நாய்கள்.

-மீனாவிக்னேஷ் 

  

No comments:

Post a Comment