Monday, April 16, 2012

ஆறுதல் கூற வேண்டும்

1 .
புதுமைபித்தன்,சுஜாதா போன்றோர்களின் சிறுகதைகளை போலவே,என் கல்லூரி நண்பர்களின் வாழ்த்து மடல்,எத்தனை முறை படித்தாலும் சலிப்பதே இல்லை, அவர்களின் நினைவுகளை சுமக்கும் பொக்கிசங்கள் அவை.

என் நண்பர்களை,மிக மிக அன்பு மிகுந்தவர்களாய்,நெருக்கம் மிகந்தவர்களாய் மாற்றியது கல்லூரியின் கடைசி நாட்கள்.

என் கல்லூரியின் கடைசி நாள்,அந்த சிறிய கட்டத்திற்குள் அடைபடாமல் நெருக்கிக்கொண்டு கைகள் கோர்த்து,தோழில் சாய்ந்து நட்பின் மகத்துவத்தை தாங்கி நிற்கிறது,
இன்று ஒவ்வொருவரும்,பெரிய மனிதர்களாய் மாறியிருக்க கூடும்,ஆனாலும் குழந்தை சிரிப்போடு,யாதுமறியா பருவத்தை சுட்டிக்காட்டுகிறது ,நாங்கள் எடுத்துக்கொண்ட புகைப்படம்.

2 .
ஆரம்பம் முதலே ஏன் கடைசி நாட்களை பற்றி பேச வேண்டும்,முதல் நாளிலிருந்தே தொடங்கலாமே,
கல்லூரி நண்பர்கள் என்றதுமே என் நினைவுக்கு வருபவர்கள்,
மகேஷ்,பாலா, மற்றும் திவ்யா.
எங்கள் வகுப்பறையில்,இடது புறமாக முதல் ஐந்து வரிசைகளில் பெண்களும்,அதற்கு பின்னால் ஆண்களும் அமர்ந்து இருப்பார்கள், திவ்யா            ஐந்தாவது வரிசையிலும்,நாங்கள் ஆறாவது வரிசையிலும் அமர்ந்திருப்போம்.

நேரடியாக இரண்டாவது வருடத்திலிருந்து,மகேஷ்  எங்களுடன் சேர்ந்து கொண்டான்,சேர்ந்து கொண்ட முதலே நன்றாக பழகி விட்டோம்,

திவ்யா,மகேஷ்யே திரும்பி திரும்பி பார்த்து கொண்டிருந்தாள்.
என் இப்படி பார்க்கிறாய் என கேட்டதிற்கு,மகேஷ் பார்பதற்கு தன் சகோதரனை போலவே இருப்பதாக கூறினால்.

பாலாவும்,நானும் சண்டை பிடித்து அண்ணனாகி கொண்டோம்,
உண்மையில் எங்கள் மூவருக்குமே, உடன் பிறந்த தங்கை கிடையாது.

கல்லூரியில் காதலி கிடைப்பவன் நிலை,எதுவோ எங்களுக்கு தெரியாது,
தங்கை கிடைத்தால் ,தங்கச்சி தங்கச்சி,என தினம் தினம்,பாசமலர் படம் காட்டுவது அலாதியான இன்பம் தான்,

திவ்யா அதிகமாக பேசமாட்டாள்,ஏதோ சொல்கிறாள் என்றால் அது என்னை கேலிக்குள்ளாகுவதாய் இருக்கும்,மகேஷ்ம்,பாலாவும் சிரித்து சிரித்தே அதை சிறப்பாக்கி விடுவார்கள்.

3 .
எனக்கு பிடிக்காத பாடவேளை என்றால்,நான் நன்றாக தூங்கி விடுவேன்,
வேண்டுமென்றே செய்வதல்ல,எதார்த்தமாக நடந்து விடுகிறது,

அவர்கள் எதோ சிரித்து பேசிக்கொண்டிருந்தார்கள்,என்னால் அவர்களிடம் கவனம் செலுத்த முடியவில்லை ,
வழக்கம் போல் இல்லை,எவ்வளவோ அதிகமாக என் தூக்கத்தை கட்டுப்படுத்தி இருந்தேன்,ஆனாலும் என் கண்கள் சிவந்து,கன்னமெல்லாம் வீங்கி இருப்பதை என்னாலே உணர முடிந்தது,
இதனிடையில் வகுப்பாசிரியரால் கவனிக்கபட்டோம் போல,என் அருகிலிருந்த மகேஷ்-ஐ எழுப்பி,
"என்னடா சிரிக்கிறிங்க,சொல்லு எல்லாரும் சேர்ந்து சிரிப்போம்" என்றார்
சிறிது நேரம் அமைதியாக நின்று கொண்டிருந்தான்,அதனை தொடர்ந்து,

"திவ்யா எந்திரு,சொல்லு நியும் தான சிரிச்சிட்டு  இருந்த"என்றார்.
பிரச்சனை வேறு விதமாக செல்கிறதென உணர்ந்தவன்,
"விக்கி தூங்கி தூங்கி விழுகுறான் அதான் சிரிப்பா இருந்துச்சு"என்றான்,
பொருத்தமான பதில் ஆகவே ஆசிரியரின் நினைப்பு குழப்பத்திற்குள்ளானது,
எனக்கோ பெருத்த அவமானம், மொத்த வகுப்பறையும் சிரிப்பால் நிரம்பியது,
இதெல்லாம் கல்லூரி வாழ்கையில் சகஜம் தானே.

மகேஷ்ம்,திவ்யாவும், நான் அவமதிக்கப்பட்டதை நினைத்து மிகவும் வருந்தினார்கள்,அது குறித்து,எங்கள் வகுப்பறையின் பின்னால் பேசிக்கொண்டிருந்தோம்,


அதன் வழியாக கடந்து சென்ற ஆசிரியர்,வகுப்பறையில் கொண்ட சந்தேகத்தை உறுதி செய்யும் விதமாக,
 எங்களை அழைத்து கண்டிக்க தொடங்கினார்,
"நிங்கல்லாம் படிக்கிறதுக்கு வறிங்களா,இல்ல இப்புடி கூத்தடிக்க வறிங்களா"
என்னும் வார்த்தைகளை தொடர்ந்து திவ்யா அழுகத்தொடங்கி இருந்தாள்,

அவர் மிதான எங்கள் கோபம்,இப்பிரச்சனையை மேலும் அதிகரிக்கவே செய்யும்,ஆகையாலேதிவ்யாவை சமாதானம் செய்வதே அவசியமென தோன்றியது.

4 .
இந்நிகழ்வை மறந்தபடியே சில தினங்கள் கடந்தன,எங்கள் வகுப்பிற்கு புதிதாக ஓர் ஆசிரியை வருகை அளித்திருந்தார்கள்,
வந்த முதல் நாளிலிருந்தே மகேஷ்,திவ்யா மீது ஓர் பார்வை இருந்தது,
ஒரு வாரம் கூட கழிந்திருக்காது,ரம்யாவை தனியே அழைத்து சென்று ஏதோ பேசிக்கொண்டிருந்தார்.
என்ன நடந்ததென கேட்டதற்கு,நிண்ட அழுகைக்கு பின்னர் தான் அவளால் பதிலளிக்க முடிந்தது,
 "நீயும் மகேஷ்ம் லவ் பண்றிங்களா,எப்போ ஓடி போக போறிங்க"என கேட்டார்களாம்,
ஓர் ஆசிரியை இப்படியான சந்தேகத்துடன்,நல்லபடியாக பாடம் நடத்த முடிமா.

இனியும் பொறுத்தால் அவர்கள் கேட்டது உண்மையென ஆகிவிடுமே,எனவே அணைத்து மாணவர்களையும் வெளியே திரட்டினோம்,
நியாயம் கிடைக்காமல் உள்ளே செல்வதில்லையென முடிவு.

பாலாவின் கோபம் உச்சத்தை தொட்டிருந்தது,
ஏனோ என நின்று கொண்டிருந்த சில பெண்களை அவன் மிரட்டி கொண்டிருந்தான்,ரம்யாவின் உணர்வுகளை எங்கள் அளவிற்கும் அவர்களால் உணர முடியவில்லையா,ஆச்சர்யமாகத்தான் இருந்தது,

கல்லூரி முதல்வர் இந்த பிரச்சனையை மிக சுலபமாக முடித்து விட்டார்,
எப்படி எனக்கேட்டால்,மதிப்பெண் முக்கியமென கருதினால் வகுப்பறை உள்ளே செல்லலாம் என்றார்,ஒரு சில பெண்களை தொடர்ந்து மொத்த மாணவர்களும் உள்ளே சென்று விட்டார்கள்,

நடந்தவைகள் அறிந்து, திவ்யாவின் அப்பா முதல்வரை மிரட்டி எடுத்து விட்டார்,அவரின் பேச்சு உண்மையை உணரச் செய்தது,

அதனை தொடர்ந்து அந்த ஆசிரியையும் வெளியேற்றப்பட்டார்,

இது மாதிரியான சுழலை நிறையவே சந்தித்து கொண்டிருந்தோம்,

"நி மகேஷ்-ஐ  லவ் பண்றியா"எனும் கேள்வியை எதிர் கொள்ளும் போதெல்லாம் அவள் அழுகத்தொடங்கி விடுவாள்,
எங்களுக்கோ என்ன செய்வதென தெரியாது,ஆறுதல் கூறுவதை தவிர,

அவளிடம் கற்று கொண்ட பாடம்,ஆறுதல் கூறவும்,தேற்றுதலை அறியவும்,அன்பு கொண்டிருக்க வேண்டும்.

5
கல்லூரி முடிந்து ஒரு மாத காலமிருக்கும்,பாலாவும் நானும் மகேஷ்-ன் வருகைக்காக காத்திருந்தோம்,
மகேஷ்க்கும் தகவல் சொல்லியாகி விட்டது,தகவல் என்னவென்றால் ,
திவ்யா இறந்து விட்டால்,ஆம் ஏதோ ஒரு வாகனம் அவளின் சைக்கிள் மீது மோதி விட்டதாம்.

மகேஷ்ஐயும் அழைத்து கொண்டு,திவ்யா வின் வீட்டை அடைந்ததும்,
அவளின் காலடியில் விழுந்து,மார்பில் அடித்து கொண்டு அழத்தொடங்கினான்,

திவ்யாவை யாரேனும் தவறாக பேசி விட்டால்,மனமுடைத்திருந்த அவள் பெற்றோர்களால் தாங்கிக்கொள்ள முடியாது,

மகேஷ்ன் செய்கை அப்படி பேசச்செய்யுமா என பயந்து அவனை வெளியே அழைத்து வந்தோம்.

அவனிடம் என்ன ஆறுதல் கூறுவதென்றே தெரியவில்லை,இந்நிலையில்,

"மச்சான் திவ்யா பாவம் டா,அவ கூட யாருமே இல்லடா,நானும் போறேண்டா"என்றான்,
ரம்யாவின் பிரிவையே தாங்க முடியாத நிலையில் இவனும் ஏதோ செய்து கொள்வானோ என பதறத்தொடங்கியது மனம்,

அவன் வீடு வரை சென்று, அவனுடைய வீட்டினுள் எடுத்து சொல்லி பார்த்து கொள்ளும் படி கூறிய பின்னரே கொஞ்சம் சாந்தம் அடைந்தோம் ,

இறுதியாக 'என்னப்பா இவன் ஏன் இப்புடி அழுகுறான் ஏதும் லவ் மேட்டரா"என கேட்டார் மகேஷ்ன் சகோதரர்,

எங்களுக்கு வெறுப்பாகி விட்டது அவள் இறந்து விட்டால் ஆகினும் இந்த கேள்வி அவளை விட்டுவிட வில்லையே.

உடலை விட்டு பிரிந்தாலும்,அவள் ஆன்மா இதையெல்லாம் பார்த்து கொண்டிருக்கும்,அவள் அழுகத்தொடங்கி இருப்பாள்.
மகேஷ்-ஐ போலதான் நானும் உணர்கிறேன்.

வெகு நாட்கள் கடந்து விட்டது இன்றும் கூட ,எங்களிடம் ஏதேனும் வரம் கேட்க சொன்னால்,என்னை ரம்யாவிடம் கொண்டு செல் நான் அவளுக்கு ஆறுதல் கூற வேண்டும் எனக்கேட்போம்.

-மீனா விக்னேஷ் 
 













2 comments:

  1. கல்லூரி முடிந்த கையோடு எழுத்தை நிறுத்தி விட்டு வாசிப்பை மட்டுமே பழக்கப் படுத்திக்கொண்ட எனக்கு உன் எழுத்துகள் மீண்டும் என் விரல்களுக்கு பேனா எடுத்து கொடுக்கிறது... உன் எழுத்துகளுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...! வாழ்கையில் கல்லூரி,நம் வீடு,நண்பர்கள் இதற்க்கெல்லாம் அப்பாற்ப்பட்டு யோசிக்கும்போதுதான் மனிதர்களின் பரிணாமம் ( அவனுடைய உருவ வளர்ச்சியில் அல்ல ) நமக்கு புரியும். ஈழத்தில் மார் அறுத்து கொல்லப்பட்ட பெண்ணின் கொலைதான் இந்த சிந்தனையை எனக்கு கொடுத்தது....கதி முனையை விட பேனா முனை கூர்மையானது உனக்கு தெரிந்ததே...! மீண்டும் சொல்கிறேன் உன் எழுத்துகளுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்....! என்றும் அன்புடன்....கே.ஜி.மணிகண்டன் (சினிமா நிருபர்).

    ReplyDelete
  2. Bm SiTúW….. Sôàm GÝR UWkÕ ®húPu

    ReplyDelete