Saturday, January 21, 2012

போராட்டங்கள்

மனிதன், முழுவேகத்தில் போராடி கொண்டிருக்கிறான்,
மிருகங்கள்,காடுகள்,வயல்வெளிகள்,
இவைகளையெல்லாம் வென்றுவிட்ட களிப்பில்,

இனி போராட துடிப்பது,
கலாச்சாரம்,மனிதநேயம்,மனிதன்,
இவைகளையும் வெற்றி கொண்டால்,
பூமியில் இல்லாமல் போவது மனிதஇனம் தானே,

இது மனிதனுக்கு இல்லை என்றாலும்,
பூமிக்கு நற்செய்தியே,வாழட்டும் பூமி,
விடைபெற தயாராகுங்கள் மனிதர்களே.

-மீனாவிக்னேஷ்    

No comments:

Post a Comment